ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

 

ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் கடந்த 35 வருடங்களில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் 2019ம் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் உருவான தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடும் அவதியை சந்தித்தனர்.

ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் என்று சென்னைக்கு தண்ணீர் வழங்கும் அத்தனை ஏரிகளும் வறண்டுபோயின. போரூர், மதுரவாயல் ஏரிகளும் வரண்டு கிடந்தன. தண்ணீர் பிரச்சனையினால் பல உணவகங்கள் மூடப்பட்டன. பல விடுதிகள் மூடப்பட்டன. 25 ரூபாய்க்கு விற்ற தண்ணீர் கேன்களும் 40 ரூபாயை தாண்டி மக்களை கடுமையாக வாட்டியது.

சென்னைக்கு மீண்டும் அப்படி ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக, சென்னை மாநகரில் உள்ள நீர்வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

தமிழக சட்ட பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இதை தெரிவித்தார்.

மேலும், சென்னை மாநகரின் வளர்சிக்காக உலக வங்கியின் துணையுடன் திட்டம் வகுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் ஆகியவற்றில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

சென்னை நகரின் நீர்வளங்களை திட்டமிட்டு நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் உருவாக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதை சென்னை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.