ரசிகர்கள் தொல்லையால் பாதியில் ஓடிய அஜீத்!

 

ரசிகர்கள் தொல்லையால் பாதியில் ஓடிய அஜீத்!

என்னதான் ரகசியம் காத்து வந்தாலும் அஜீத் போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பின் தொடர்ந்து விடுகிறார்கள். இன்றைக்கும் அப்படித்தான் நடந்துவிட்டது. தொப்பி போட்டுக்கொண்டு சாதாரணமாக அஜித் காரைவிட்டு சென்றாலும், அதன்பின்னர் அங்கிருப்பது அஜித்துதான் என்று தெரியவந்ததும் ஒரு பட்டாளமே கூடிவிட்டது. இதனால் செய்வதறியாது தவித்த அஜித், ரைபிள் கிளப்பில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிட்டார்.

அவர் புறப்பட்டு சென்றார் என்று சொல்வதை விட, ஓடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் தொல்லையால் பாதியில் ஓடிய அஜீத்!

சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அஜித். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரைபிள் கிளப் செல்வதற்கு பதிலாக அவர் மாறி, காவல் ஆணையர் அலுவலகம் சென்றுவிட்டார். காவல் ஆணையர் அலுவலதில் அஜீத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ந்துவிட்டனர். அதன்பின்னர் அவரை காவலர்கள் ரைபிள் கிளப்பிற்கு அழைத்து சென்றனர்.

ரசிகர்கள் தொல்லையால் பாதியில் ஓடிய அஜீத்!

இந்த சம்பவத்தினால், அஜித் ரைபில் கிளப்பிற்கு வருவது ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது. இதனால், அஜித் வரும் வழியில் விழி வைத்து காத்திருந்தார்கள். இன்று ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, ரசிகர்கள் கூடிவிட்டனர். கூட்டம் அதிகமாக அதிகமாக பதற்றம் ஏற்பட்டது. இதனால், துப்பாக்கி சுடும் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அஜித்.