இனியும் பயன்படுத்த முடியாது என்பதால் அதை தூர வீசி வெளியேறினர்.. எச்.ராஜா

 

இனியும் பயன்படுத்த  முடியாது என்பதால் அதை தூர வீசி வெளியேறினர்.. எச்.ராஜா

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என முடிவான நிலையில் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.

இனியும் பயன்படுத்த  முடியாது என்பதால் அதை தூர வீசி வெளியேறினர்.. எச்.ராஜா

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகியதால், காங்கிரஸின் பலம் குறைந்தது. இதனால் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கவிழ்ந்தது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘’புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஒட்ட வைக்கப்பட்ட உடைந்த கண்ணாடியாகவே இருத்து வந்தது. இனியும் பயன்படுத்த இயலாது என்ற நிலையில் பல காங்கிரஸ் தலைவர்கள் அதை தூர வீசி வெளியேறினர். அதன் விளைவாக இன்று நாராயணசாமி அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்.

இனியும் பயன்படுத்த  முடியாது என்பதால் அதை தூர வீசி வெளியேறினர்.. எச்.ராஜா