காலியாக கிடக்கும் நாற்காலிகள் முன்பு முதல்வர் எழுச்சி உரை! காங்., எம்.பி. வெளியிட்ட வீடியோ

 

காலியாக கிடக்கும் நாற்காலிகள் முன்பு முதல்வர் எழுச்சி உரை! காங்., எம்.பி. வெளியிட்ட வீடியோ

கரூரில் முதலமைச்சர் வருவதற்கு முன்பே கூட்டம் கலையத்தொடங்கிவிட்டது. மக்கள் வரவேற்புக்கு கட்டியிருந்த வாழைத்தாரை அறுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். நாற்காலிகள் காலியாக கிடந்துள்ளன. இதை படம்பிடித்தார்கள் என்று ஊடகவியலாளர்களை அதிமுகவினர் தாக்கியிருக்கிறார்கள். அழிவின் ஆரம்பம் இது என்று தெரிவித்திருக்கிறார் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

காலியாக கிடக்கும் நாற்காலிகள் முன்பு முதல்வர் எழுச்சி உரை! காங்., எம்.பி. வெளியிட்ட வீடியோ

அவர் மேலும், கரூரில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் அதிமுகவினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அடித்து, கொலைமிரட்டல் விடுத்து, செல்போனை பறித்து அராஜகம் செய்திருக்கிறார்கள். ஊடக நண்பர்கள் முதலமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காலியாக கிடக்கும் நாற்காலிகள் முன்பு முதல்வர் எழுச்சி உரை! காங்., எம்.பி. வெளியிட்ட வீடியோ

இதன் பின்னர் ஒரு வீடியோவை வெளியிட்டு, ’’ காலியாக கிடக்கும் நாற்காலிகள் முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி உரை! இரண்டு நாட்களுக்கு முன்பு தரகம்பட்டியில் போக்குவரத்து விஜயபாஸ்கருக்கும் இதே நிலை. எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அதனால் தான் வெறிகொண்டு அலைகிறார்கள்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.