துப்பாக்கி முனையில் சிறுமி வன்கொடுமை; உறவினரின் வெறிச்செயல்

 

துப்பாக்கி முனையில் சிறுமி வன்கொடுமை; உறவினரின் வெறிச்செயல்

வீட்டில் சல்மா(15) மட்டும் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு வந்துள்ளான் அவன். அடிக்கடி வந்துபோகும் உறவினர் என்பதால், வீட்டில் யாரும் இல்லாதபோதும், பயமில்லாமல் உபசரித்துள்ளார் சல்மா. ஆனால், அந்த உறவினரே திடீரென்று மிருகமாக மாறுவான் என்று கொஞ்சமும் சல்மா நினைத்திருக்க வாய்ப்பில்லைதான்.

துப்பாக்கி முனையில் சிறுமி வன்கொடுமை; உறவினரின் வெறிச்செயல்

ஆள் வருவதற்குள், சல்மாவின் வாயை பொத்தி, அருகில் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்த ஒரு கட்டிடத்திற்குள் தூக்கிச்சென்றூவிட்டான். சல்மாவின் ஆடைகளை அகற்றியபோது சத்தம் போட்டதும், துப்பாக்கி்யை எடுத்து காட்டி மிரட்டி இருக்கிறான். அதனால் மிரண்டு போன சல்மா, அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டு விட்டார்.

துப்பாக்கி்யை கீழே வைத்துவிட்டு அவன் சல்மாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டபோது, சமயம்பார்த்து சல்மா கூச்சல் போட்டிருக்கிறார். அந்த கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதைக்கண்டதும் தப்பித்து ஓட பார்த்தவனை மடக்கி பிடித்துவிட்டனர்.

துப்பாக்கி முனையில் சிறுமி வன்கொடுமை; உறவினரின் வெறிச்செயல்

சொந்தக்காரன் என்று நம்பி உன்னை வீட்டுக்குள்ள விட்டதுக்கு நீ காட்டுற விசுவாசமா இது? சல்மாவின் பெற்றோர் அவன் முகத்தில் காரி உமிழ்ந்தனர்.

பின்னர் அவனை போலீசில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் அவனை கைது செய்தனர் போலீசார்.

உத்தரபிரதேசம் மீரட் மாவட்டத்தின் சர்தானா நகர் மக்களை இந்த சம்பவம் அதிரவைத்திருக்கிறது.