கூடாவொழுக்கம் – ராமதாஸ் சொல்லும் விளக்கம்

 

கூடாவொழுக்கம் – ராமதாஸ் சொல்லும் விளக்கம்

கூடாவொழுக்கம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விளக்கத்தினை அளித்திருக்கிறார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும் என்று தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

மேலும், திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கூடாவொழுக்கம் – ராமதாஸ் சொல்லும் விளக்கம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். (குறள் 280, கூடாவொழுக்கம்). பொருள்:உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம். இப்படி கூறிய வள்ளுவரை அதற்கு எதிராக சித்தரிப்பது குரூரமானது என்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து நமக்கான வாழ்வியல் நெறிமுறைகளை அருளிய திருவள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று கற்பனையில் வரைந்த ஒவியம்தான் நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம்.

கூடாவொழுக்கம் – ராமதாஸ் சொல்லும் விளக்கம்

இதனால் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அவரை வரைந்துகொள்கிறார்கள். தற்போது அவருக்கு மொட்டை அடித்து குடுமி வளர்த்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் அப்படித் தான் திருவள்ளுவரின் உருவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. நெற்றி, கைகளில் பட்டை, மார்புக்குக் குறுக்காக ருத்ராட்ச கொட்டை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். அந்தணர் போல முழுவதுமாக மொட்டையடித்து தலையின் பின்புறத்தில் மட்டும் குடுமியுடன் வரைந்திருக்கிறார்கள். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜகவினர் வெளியிட்ட படம் முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது சிபிஎஸ்இ புத்தகத்தில் வரையப்பட்டிருக்கும் படம் இணைந்திருக்கிறது.

கூடாவொழுக்கம் – ராமதாஸ் சொல்லும் விளக்கம்
ராமதாஸ்

1964ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அப்போதைய குடியரசு துணைத் தலைவரான சாகிர் உசேன் திறந்துவைத்தார். அதன்பின் கருணாநிதி முதல்வரான பிறகு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அது உருமாறியது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் திருவள்ளுவர் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பார். நீண்ட நெடிய கொண்டை, தூய தாடி சகிதம் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட கம்பீரமான திருவள்ளுவரின் உருவத்தை சிபிஎஸ்இ புத்தகத்தில் அலங்கோலப்படுத்தியிருப்பதால் பலரும் வெகுண்டெந்திருக்கிறார்கள்.

CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அந்த வகையில்தான் ராமதாசும் தனது கண்டனத்தினை பதிவு செய்திருக்கிறார்.