’லவ் பண்ண முடியுமா? முடியாதா?’ நடுரோட்டில் மாணவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

 

’லவ் பண்ண முடியுமா? முடியாதா?’ நடுரோட்டில் மாணவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

’விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது’ என்று கண்ணதாசனும், ‘விழி்யில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உறவு’ என்று வைரமுத்துவும் சொன்னதுதான் உண்மை என்று காதலர்கள் சொன்னதுண்டு; சொல்வதுண்டு. ஆனால், ‘வருமா?வராதா?’ என்று துப்பாக்கி முனையில் கேட்டால் வந்துவிடுமா என்ன? இது மாதிரியான ஒருதலை தருதலைகளின் அட்டகாசம் எங்கேயும் எப்போதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

தெலுங்கானாவிலும் இப்படி ஒரு அட்டகாசம் அரங்கேறி இருக்கிறது.

’லவ் பண்ண முடியுமா? முடியாதா?’ நடுரோட்டில் மாணவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

ஐதராபாத் சாய் நகரைச் சேர்ந்த தீபா, அப்பகுதியில் பொறியியல் படித்து வந்தார். தினமும் கல்லூரி சென்றூவிட்டு வரும்போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞன் தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளான். தனக்கு விருப்பமில்லை என்று தீபா சொல்லிவிட்ட பின்னரும் அபிஷேக் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

’லவ் பண்ண முடியுமா? முடியாதா?’ நடுரோட்டில் மாணவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

இதனால் தனது அண்ணனுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார் தீபா. இதில் ஆத்திரமடைந்த அபிஷேக், நண்பர்கள், துப்பாக்கி சகிதமாக சென்று, அண்ணனுடன் பைக்கில் சென்ற தீபாவை நடுரோட்டில் மடக்கி, துப்பாக்கியை காட்டி, ’’லவ் பண்ண முடியுமா? முடியாதா?’’ என்று மிரட்டியிருக்கிறார்.

சாலையில் சென்றோரின் உதவியுடன் அபிஷேக்கின் துப்பாக்கியை கைப்பாற்றிவிட்டார் தீபாவின் அண்ணன். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் வந்து அபிஷேக்கை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.