தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்கள் காலியாகும் … அண்ணாமலை சூசகம்

 

தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்கள் காலியாகும் … அண்ணாமலை சூசகம்

ஈரோடு மாவட்டத்தில் பவானி அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் பாஜகவின் தேசபக்தர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக பாஜகவின் துணைத்தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்கள் காலியாகும் … அண்ணாமலை சூசகம்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், எழுவரையும் மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்துவிட்டதாக ராகுல் தெரிவித்துவித்துவிட்டார். ஆனால், எழுவரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசும் தனது நிலைப்பாட்டினை உச்சநீதிமன்றத்தில் தெளிவாக கூறிவிட்டது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரில் 4 பேர் அயல் நாட்டினை சேர்ந்தவர்கள். அதனால் இது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். மத்திய அரசு இதில் சிந்துதான் முடிவெடுக்க முடியும்’’என்றார்.

தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்கள் காலியாகும் … அண்ணாமலை சூசகம்

திமுக குறித்தகேள்விக்கு, ‘’2ஜி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விரைவில் வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. அப்போது பாருங்கள் தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாகும். ஏற்கனவே ஒரு இடம் காலியாக இருக்கிறது. அப்புறம் அது மூன்றாக மாறும்’’ என்றார் சூசகமாக.