ஒரு எம்.பி.கூட இல்லேன்னாலும் ஒரு குறையும் வைக்கலையே மோடி – நிர்மலா சீதாராமன்

 

ஒரு எம்.பி.கூட இல்லேன்னாலும் ஒரு குறையும் வைக்கலையே மோடி – நிர்மலா சீதாராமன்

தமிழக பாஜகவின் வணிகர்கள்மற்றும் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று மாலை நடைபெற்றது., இதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தை வஞ்சிக்கிறதே பாஜக? என்ற கேள்விக்கு, ‘’பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி. கூடை கிடையாது. ஆனாலும் தமிழகத்திற்கு ஒருகுறையும் வைக்காமல் செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. ஒரு குறையும் வைக்காமல் துறை வாரியாகத்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

ஒரு எம்.பி.கூட இல்லேன்னாலும் ஒரு குறையும் வைக்கலையே மோடி – நிர்மலா சீதாராமன்

அவர் மேலும், ’’அதிமுக -பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் பொய் பிரச்சாரம் செய்து அரசியல் செய்யும் சூழல் நிலவுகிறது’’என்றார்.

ஒரு எம்.பி.கூட இல்லேன்னாலும் ஒரு குறையும் வைக்கலையே மோடி – நிர்மலா சீதாராமன்

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்ட தமிழக மீனவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வந்து அவர்களை குடும்பத்தினரோடு சேர்த்து வைத்து மகிழ்ந்தது பாஜக அரசுதான் என்றார்.