உன் பொண்டாட்டி போனா போகட்டும்.. என்னை கைவிட்டுடாத.. அடம்பிடித்த காதலியை அடித்துக்கொன்ற காதலனும் தற்கொலை

 

உன் பொண்டாட்டி போனா போகட்டும்.. என்னை கைவிட்டுடாத.. அடம்பிடித்த  காதலியை அடித்துக்கொன்ற காதலனும் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் வசித்துவந்த ரதிதேவி, நிலக்கோட்டை ஊராட்டி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியில் இருந்து வந்துள்ளார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ரதிதேவிக்கு , போட்டோகிராபர் சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் உல்லாசம் வரைக்கும் சென்றுவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த உறவு தொடர்ந்திருக்கிறது.

உன் பொண்டாட்டி போனா போகட்டும்.. என்னை கைவிட்டுடாத.. அடம்பிடித்த  காதலியை அடித்துக்கொன்ற காதலனும் தற்கொலை

திடீரென்று சுரேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தபோது அதை தடுத்து நிறுத்த முயன்றிருக்கிறா ரதிதேவி. ’’யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் உன்னை விடமாட்டேன்’’ என்று சுரேஷ் உறுதி கொடுத்ததால் அமைதியாகிவிட்டார் ரதிதேவி. ஆனால், அந்த சத்தியத்தை சுரேஷினால் காப்பாற்ற முடியாத சூழல் வந்தது.

தன் கணவன் வேறோரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருப்பதை தெரிந்துகொண்ட சுரேஷின் மனைவி, கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ், ரதிதேவியை கைகழுவி விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

உன் பொண்டாட்டி போனா போகட்டும்.. என்னை கைவிட்டுடாத.. அடம்பிடித்த  காதலியை அடித்துக்கொன்ற காதலனும் தற்கொலை

ரதிதேவியிடம் விசயத்தை எடுத்துச்சொல்லி புரிய வைக்கலாம் என்றால், ‘’அவ போனா போட்டும் என்னை கைவிட்டுடாத… உன்னை விட்டுட்டு என்னால வாழ முடியாது. நீதாண்டா எனக்கு வேணும்’’ என்று அடம் பிடித்திருக்கிறார்.

எப்படியாவது பேசி ரதிதேவியை சமாதானப்படுத்தி விடலாமென்று பைக்கில் வைகை அணைக்கு அழைத்து சென்றிருக்கிறார். பைக்கில் போகும்போதே வாக்கும்வாதம் வந்திருக்கிறது. வெறீயப்ப நாயக்கன் பட்டியில் சாலையோரமாக பைக்கை நிப்பாட்டி விட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, வாக்குவாதம் வலுத்து, ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து ரதிதேவியின் தலையில் அடிக்க, அவர் ரத்தம் கொட்டி கீழே சரிந்தார்.

இதனால் அதிர்ச்சி ஆன சுரேஷ் அங்கிருந்து பைக்கில் பறந்துவிட்டார்.

அப்பப்பக்கமாக சென்றவர்கள், ஆம்புலன்சை வரவழைத்து ரதிதேவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரதிதேவி உயிரிழந்துவிட்டார்.

உன் பொண்டாட்டி போனா போகட்டும்.. என்னை கைவிட்டுடாத.. அடம்பிடித்த  காதலியை அடித்துக்கொன்ற காதலனும் தற்கொலை

போலீஸ் விசாரணையில் சுரேஷ் மீது சந்தேகம் எழுந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், சொந்த ஊர் குரும்பபட்டி சென்று அங்கு கண்மாயில் உட்கார்ந்து மதுவில் விசம் கலந்து குடித்து மயங்கிகிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமண உறவினை மீறின உறவினால், காதலர்கள் இருவரின் மரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.