ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஜோதிமணி ஆவேசம்

 

ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி  கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஜோதிமணி ஆவேசம்

கருணை, அன்பு, பண்பு எளிமை, கண்ணியத்தின் வடிவம் எமது தலைவர். இது எதுவுமே இல்லாத ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்று ஆவேச கேள்வி எழுப்புகிறார் கரூர் காங்கிரஸ் எம்.,பி. ஜோதிமணி.

ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி  கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஜோதிமணி ஆவேசம்

ஒருநாள் தேர்தல் பிரச்சாரப் பயணமாக ராகுல்காந்தி நேற்று முன் தினம் புதுச்சேரி மாநிலம் சென்றார். மீனவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் அவர் கலந்துரையாடினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த ‘புதிய தேசத்தின் புதுவைபெண்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ராகுல் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவி, ‘’ராகுல் அண்ணா… ராகுல் அண்ணா..’’என்று ஒரு நோட் பேடினை எடுத்துக்கொண்டு மேடைஅருகே ஓடினார். அவரிடம் இருந்து நோட் பேடை வாங்கி ராகுல் கையெழுத்து போட ஆரம்பித்ததும், அந்த மாணவிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. துள்ளி துள்ளி குதித்தார்.

ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி  கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஜோதிமணி ஆவேசம்

இதைப்பார்த்த ராகுல், அம்மாணவிக்கு கை கொடுத்தார். பாசத்தில் ராகுலின் கைகளை விடாமல் பிடித்து குலுக்கினார் அம்மாணவி. அப்போது மாணவியின் தலையில் பாசமாக கைவைத்து விடை கொடுத்தார் ராகுல். பிரிய மனமில்லாமலும், நெகிழ்ச்சியிலும் அந்த மாணவி கண்ணீர் விட, மேடையில் மண்டியிட்டு, மேடைக்கு கீழே நின்ற அந்த மாணவியை அருகே அழைத்து அரவணைத்துக்கொண்டார். அந்த மாணவியும் பாசமாக அரவணைத்துக்கொண்டார். போட்டோக்காரர்கள் அழைத்ததால், மாணவியிடம் சொல்லி கேமராவை பார்த்து சிரித்தார் ராகுல்.

ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி  கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஜோதிமணி ஆவேசம்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘’இது உண்மையான பாசம். ராகுல் அண்ணா… வெறும் வார்த்தை அல்ல..உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்வு’’ என்று பலரும் பதிவிட்டுவருகின்றனர்.

காங்கிரஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்த வீடியோவினை வெளியிட்டு, ’’புதுச்சேரியைச் சேர்ந்த இந்த இளம் மாணவர் காட்டிய வைராக்கியம் ஒரு விஷயத்தின் பிரதிபலிப்பாகும். இளம் இந்தியா மிகப்பெரிய ஆற்றலால் நிறைந்துள்ளது. உண்மையான தலைவர்கள் அதை அங்கீகரிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் மற்றும் நமது நாட்டின் செழிப்புக்கு காரணமாக இருக்கிறார்கள்’’என்று பதிவிட்டிருக்கிறது.

ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி  கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஜோதிமணி ஆவேசம்

புதுவையில் நடந்த நிகழ்வு குறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’’அன்பெனப் படுவது யாதெனில்..’’என்று பதிவு செய்தார். மேலும், ராகுலில் வருகை குறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்து வருவது குறித்து, ‘’கருணை,அன்பு,பண்பு எளிமை, கண்ணியத்தின் வடிவம் எமது தலைவர். இது எதுவுமே இல்லாத ஒரு அநாகரிக ஆர். எஸ். எஸ்/பிஜேபி கும்பலின் பிரதியான உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தமிழ் மண்ணுக்கென்று ஒரு கௌரவம், கண்ணியம், நயத்தக்க நாகரிகம் உள்ளது. அதையாவது காப்பாற்றுங்கள்’’என்கிறார் ஆவேசமாக.