எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்… சீமான்

 

எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் மகள் ஆசிபாவின் மறைவுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் விடுத்துள்ளார்.

எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்… சீமான்

அதில், ‘’நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அப்துல் வகாப் அவர்களின் அன்புமகள் ஆசிபா மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,பெருந்துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பிக்கு எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்’’ என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்… சீமான்

’’மகள் ஆசிபா பற்றிய நினைவுகள் என்னைப் பெரிதும் ஆட்கொண்டு வாட்டுகின்றது. இந்த இழப்பு தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் பாதித்திருக்கிறது.

தம்பியின் துயரில் பங்குகொண்டு, குடும்பத்தாரோடும், உறவுகளோடும் உடன்நிற்கிறேன்! மகளுக்கு எனது கண்ணீர் வணக்கம்!’’என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் சீமான்.