முதல்நாளிலேயே அதிரடி காட்டிய ஆளுநர் தமிழிசை! பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவு

 

முதல்நாளிலேயே அதிரடி காட்டிய ஆளுநர் தமிழிசை! பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவு

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

முதல்நாளிலேயே அதிரடி காட்டிய ஆளுநர் தமிழிசை! பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

இன்று அவர் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே அவர், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு போட்டு அதிரடி காட்டியிருக்கிறார்.

முதல்நாளிலேயே அதிரடி காட்டிய ஆளுநர் தமிழிசை! பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவு

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸுக்கும் என்.ஆர்.காங்கிரசுக்கும் தலா 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் வருகிற 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார். ஆளும் காங்கிரசில் இருந்து 4 எம்.எல்.ஏகக்ள் விலகி உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.