அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் யோசிப்பது நலம் -திருமுருகன் காந்தி

 

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள்  யோசிப்பது நலம் -திருமுருகன் காந்தி

மூன்று தலித் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுகையில் ஒரு இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டனர். ஒரு சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான், ’’அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் யோசிப்பது நலம்’’ என்கிறார் மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள்  யோசிப்பது நலம் -திருமுருகன் காந்தி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக மூன்று தலித் சிறுமிகள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பாததால் பெற்றோரும் உறவினர்களும் தேட தொடங்கியுள்ளனர்.

இன்று காலையில் வயலில் ஒரு இடத்தில் அந்த சிறுமிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் போட்டிருந்த ஆடையினாலேயே கை,கால்கள் கட்டப்பட்டு கிடந்தனர்.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள்  யோசிப்பது நலம் -திருமுருகன் காந்தி

அருகே சென்று தூக்கி எடுத்து பார்த்தபோது இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டது தெரியவந்தது. ஒரு சிறுமி மட்டும் மயங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அந்த சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். சிச்சையில் அந்த சிறுமிக்கு விஷம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல் செய்துதான் அந்த சிறுமிகளுக்கு விஷம் கொடுத்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கை,கால்களை கட்டி போட்டு அந்த சிறுமிகளை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள்  யோசிப்பது நலம் -திருமுருகன் காந்தி

உன்னாவ் பகுதியில் ஏற்கனவே நடந்த பாலியல் வன்கொடுமைகள் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மூன்று தலித் சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரமும் நாடெங்கிலும் கொந்தளித்த வைத்திருக்கிறது.

பாஜக ஆளும் அரசினால் உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ‘’உத்திரபிரதேச உன்னாவ் பகுதியில் 3 தலித் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருவர் கொலை, ஒருவர் உயிருக்கு போராடுகிறார். 12,16 வயது குழந்தைகள் இறந்துபோயினர். பாஜகவின் ராமராஜ்ஜிய ஆட்சியின் யோக்கியதை இது. பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அதிமுக-பாஜக கூட்டணி பற்றி யோசிப்பது நலம்’’என்கிறார் திருமுருகன்காந்தி.