முதல்வர் சொன்ன ‘பொட்டி’ பேச்சும், துரைமுருகன் சொன்ன ‘டீ’கதையும்

 

முதல்வர் சொன்ன ‘பொட்டி’ பேச்சும், துரைமுருகன் சொன்ன ‘டீ’கதையும்

திமுகவுக்கு பொட்டி வாங்கித்தான் பழக்கம் என்று தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பிரச்சாரத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் சொன்ன ‘பொட்டி’ பேச்சும், துரைமுருகன் சொன்ன ‘டீ’கதையும்

அதாவது வாங்கித்தான் பழக்கம் கொடுத்து பழக்கமில்லை என்கிற ரீதியில் அவர் பேசியதாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேறு, ‘’ஒரே ஒரு டீயை குடித்துவிட்டு இரவு முழுவதும் வேலை செய்பவன் தான் திமுக காரன்’’ என்று சொல்லி இருக்கிறார். காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ‘’ பூத் கமிட்டியினர் 100 ஓட்டுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டவர், ‘’ பண பலத்தை ஆளுங்கட்சியினர் காட்டலாம். ஆனால், ஒரு டீ குடித்துவிட்டு இரவு முழுவதும் வேலை செய்பவன் திமுக காரன்’’ என்று சொன்னது குறித்து,

‘’வாங்கத்தானே தெரியும். அதை தொண்டர்களுக்கு கொடுக்க தெரியாதே. அதனால்தான் ஒரு டீயோடு வேலை செய்கிறார்கள். அதனால்தான் ஓசி பிரியாணி கேட்கிறார்கள்’’ என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.