‘இதுதான் அதிமுக’ -ஓபிஎஸ் பெருமிதம்

 

‘இதுதான் அதிமுக’ -ஓபிஎஸ் பெருமிதம்

அதிமுக கட்சியில்தான் சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ. ஆகலாம். அமைச்சர் ஆகலாம், முதலமைச்சர் ஆகலாம் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் பெருமிதமாக பேசி வருவது வழக்கம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் பலமுறை இதுகுறித்து பேசி பெருமிதம் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் தற்போது, ‘’தொண்டன் நினைத்தால் தலைமைக்கும் உத்தரவிடலாம். இதுதான் அதிமுக’’ என்று சொல்லி நெகிழ்ந்திருக்கிறார்.

‘இதுதான் அதிமுக’ -ஓபிஎஸ் பெருமிதம்

தேனி மாவட்ட அதிமுக தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளரான குமரிபிரபாகரன் பேசியபோது, ‘’அண்ணன் ஒருங்கிணைப்பாளர் அவர்களே, உங்களின் தொண்டனாக கேட்கிறேன்…நீங்கள் எப்போது தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்க போகிறீர்கள்?’’ என்று கேட்டவர், அடுத்து, ‘’விரைவில் நீங்கள் பிரச்சாரத்தினை தொடங்க வேண்டும்’’ என்றார்.

‘இதுதான் அதிமுக’ -ஓபிஎஸ் பெருமிதம்

’எப்போது தொடங்க போகிறீர்கள்?’ என்று கேட்டு, அதிலேயே நிற்காமல், ’விரைவில் தொடங்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டது மாதிரி பேசியதும் சிரித்துக்கொண்டார் ஓபிஎஸ்.

பின்னர் ஓபிஎஸ் பேசியபோது, குமரிபிரபாகரனின் பேச்சை குறிப்பிட்டு சொன்னார். ‘’ஒரு தொண்டன், தலைமை கழகத்தின் பேச்சாளர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை பார்த்து ஒரு உத்தரவை போட்டிருக்கிறார். இதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்த ஜனநாயக மரபு அதிமுகவிடம் தான் இருக்கிறது. தொண்டனாக இருந்தும் ஒருங்கிணைப்பாளருக்கு உத்தரவிடுகிறார். இதுதான் அதிமுக’’என்று சொல்லி நெகிழ்ந்தார்.