ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மதுபானம் ஆறாக ஓடுகிறது… நீதிபதிகள் வேதனை

 

ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மதுபானம் ஆறாக ஓடுகிறது… நீதிபதிகள் வேதனை

பூரண மதுவிலக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்த வழக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மதுபானம் ஆறாக ஓடுகிறது… நீதிபதிகள் வேதனை

மேலும், இந்த வழக்கில் தீர்ப்பில், மதுவிற்பனை மூலம் வருமான அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாநிலமே மதுவில் மூழ்கிக்கிடக்கிறது என்று வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தின் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது என்றும் வேதனையுடன் கூறினர்.

மதுபான விற்பனை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ருபாயினை வருமானமாக ஈட்டும் அரசு, பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி ரூபாயினை செலவிடுகிறது. அப்படி இருக்கையில், நீதிமன்றம் சொல்லும் இந்த யோசனைகளை அரசு கவனிக்குமா? என்றும் கவலையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர் நீதிபதிகள்.