இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பம்- கமல் பெருமிதம்

 

இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பம்- கமல் பெருமிதம்

2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன்

இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பம்- கமல் பெருமிதம்

’’நடைபெற இருக்கும் 2021 – ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும் , கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது . கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களும் கூட தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்குரிய தகுதியும் திறமையும் மக்கள் பணியில் ஆர்வமும் நேர்மையும் இருக்கிறதென கருதினால் விண்ணப்பிக்கலாம்’’ என்றும் தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல் .

மேலும், ’’ இந்தமுறை ஆன்லைனிலேயே சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் தொழில்நட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் . இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விருப்பமனுக்களைப் பெறும் கட்சி எனும் பெருமையை அடைகிறோம் . ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்’’ என்று பெருமிதம் கொள்கிறார் கமல்ஹாசன் .

இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பம்- கமல் பெருமிதம்

’’தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் , புதுச்சேரியின் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் , கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் செய்வதற்கானப் பணிகளைத் துவங்கி விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் . இந்தத் தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்’’என்றும், .

இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பம்- கமல் பெருமிதம்

’’ஒருவரை எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மனுக்கள் அனுப்பலாம் என்றும், ஒரு தொகுதிக்கு ஒரு முறை விண்ணப்பிக்க ரூ 25,000 / – நிதிநல்கையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இத்தொகை கட்சியின் தேர்தல் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும் . தங்களது விண்ணப்பம் தேர்வானாதும் ஆகாவிட்டாலும் இத்தொகை இருப்பி அனுப்பப் படமாட்டாது’’என்றும் குறிப்பிட்டிருக்கிறார் .

இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பம்- கமல் பெருமிதம்

‘’நேர்மையான ஜனநாயகத்திற்கான உங்கள் பங்களிப்பாக அத்தொகை இருக்கும்’’ என்றும், ’’ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக பொருளியவைச் சீரமைத்து தமிழகத்தை வளமாக்க முடியும் . அதற்குரிய தகுதியும் அருகதையும் திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளமே அதற்குச் சாட்சி . தனது முதல் தேர்தலிலேயே இத்தனைப் பிரம்மாண்டமான மக்கள் ஆதரவுடனும் நேர்மையான திறமையாளர்கள் புடை சூழவும் தேர்தலைச் சந்திக்கிற கட்சி எனும் பெருமிதத்துடன் உங்களை வாழ்த்துகிறேன் வெற்றி நமதே’’என்று கட்சியினருக்கு நம்பிக்கை விதைத்திருக்கிறார் கமல்.