வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கட்-அவுட்; இளைஞர் ஏற்படுத்திய பரபரப்பு

 

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கட்-அவுட்; இளைஞர் ஏற்படுத்திய பரபரப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு தொடர்ந்து இதுவரைக்கும் 24 முறை மறுபதிவு செய்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பாகவே, 24 முறையாக வெற்றிகரமாக பதிவு செய்திருக்கிறேன் என்று கட் -அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் கே.ஆனந்தராஜ்.

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கட்-அவுட்; இளைஞர் ஏற்படுத்திய பரபரப்பு

1997ல் பத்தாம் வகுப்பையும், 1999ல் 12ம் வகுப்பையும் படித்து முடித்து புதுக்கோட்டைதிருக்கோகர்ணம் வேலை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார் ஆனந்தராஜ். ஆசிரியர் பயிற்சியையும் முடித்து அதனையும் பதிவு செய்துள்ளார். இலகு மற்றும் கனரக வாகன பயிற்சியும் முடித்து அதனையும் பதிவு செய்துள்ளார்.

இத்தனை பதிவு செய்தும் எந்த வழியிலும் வேலை கிடைக்காததால், விரக்தியில் இருந்த ஆனந்தராஜ், 24ம் ஆண்டையும் பதிவு செய்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கட்-அவுட்; இளைஞர் ஏற்படுத்திய பரபரப்பு

விரக்தியில் இருந்த நண்பரை சந்தோசப்படுத்த, வெற்றிகரமான 24ம் ஆண்டு புதுப்பிப்பு என்று கட் -அவுட் வைத்து சந்தோசப்படுத்தி இருக்கிறார்கள் நண்பர்கள்.நலம் விசாரித்து கூட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதமும் வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த கட் -அவுட் அந்த பகுதியில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகமெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.