’’நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களைத் துரத்திவிடுவார்கள்’’

 

’’நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களைத் துரத்திவிடுவார்கள்’’

திருத்தணியில் ஸ்டாலின் வேல் பிடித்தது மாதிரி, பழனியில் உதயநிதி வேல் பிடித்தார்.

’’நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களைத் துரத்திவிடுவார்கள்’’

பழனியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு தொண்டர்கள் வெள்ளி வேல்-ஐ பரிசாக வழங்கினர். அவர் வேலுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

’’நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களைத் துரத்திவிடுவார்கள்’’

இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரிரகுராம், ‘’நீங்கள் கறுப்பர் கூட்டம் channel தயாரித்தீர்கள். கந்த சஷ்டி பற்றி மோசமாக பேசினீர்கள். இப்போது நீங்கள் வேல் சுமந்து வருவதற்கு எந்த சம்மந்தம் இல்லை. சில நாட்களில் மேடையில் கந்த சஷ்டியையும் பாராயணம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இது இறைவன் முருகன் மற்றும் இந்துக்களின் சக்தி. நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களைத் துரத்திவிடுவார்கள்’’’என்று தெரிவித்துள்ளார்.