கமல் முதல்வராக குருமூர்த்தி பிரார்த்தனை

 

கமல் முதல்வராக குருமூர்த்தி பிரார்த்தனை

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நான்காண்டுகளாகிறது. வரும் 21ம் தேதி அன்று 4ம் ஆண்டின் தொடக்க விழா தொடங்கவிருக்கிறது.

இந்த நிலையில், கட்சியின் சின்னம் பறிபோகும் நிலையில் இருந்தபோது, அதை போராடி மீட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

கமல் முதல்வராக குருமூர்த்தி பிரார்த்தனை

அதற்காகவே, சென்னையில் கடந்த 11ம் தேதி அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேட்டரி டார்ச் சின்னத்தை மீட்ட கமலுக்கும், அவரது வழிகாட்டுதல் படி செயல்பட்ட நிர்வாகிகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக செயல்படுவார் என்றும், கூட்டணி அமைப்பது, தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் என்றும், கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கமல் முதல்வராக குருமூர்த்தி பிரார்த்தனை

சீரமைப்போம் தமிழகத்தை, தலை நிமிரட்டும் தமிழகம் என்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும்கமல்ஹாசனை, #கமல்காலத்தின்கட்டாயம் என்று மக்கள் நீதி மய்யத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு கமல் விரும்பியபடி கிடைத்திருக்கும் விளக்கு பிரகாசிக்குமா? என்ற கேள்விக்கு, ‘’தமிழக அரசியல் இருளில் அந்த டார்ச் லைட் அவருக்கு வெளிச்சம் காண்பிக்க இறைவனை பிரார்த்திப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி.