திமுக எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை,வசனத்தில் ராகுல் நடித்தார்… அண்ணாமலை

 

திமுக எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை,வசனத்தில் ராகுல் நடித்தார்… அண்ணாமலை

கரூர் மாவட்ட பாஜக மருத்துவ பிரிவின் சார்பில் நடந்த மாபெரும் சைக்கிள் பேரணியை பாஜக துணை தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்து, அவரும் பங்கேற்றார்.

திமுக எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை,வசனத்தில் ராகுல் நடித்தார்… அண்ணாமலை

ஈசநத்தத்தில் காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி 91 கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னர் மாலை 7 மணிக்கு தளவாபாளையத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் முழுவதுமாக பங்கேற்றார் அண்ணாமலை.

திமுக எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை,வசனத்தில் ராகுல் நடித்தார்… அண்ணாமலை

பேரணிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’ராகுல்காந்தி ஒரு டிராமா கம்பெனியின் அழைப்பின் பேரில் வந்து நடித்துகொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவரின் தமிழக வருகையை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.’’என்றார்.

திமுக எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை,வசனத்தில் ராகுல் நடித்தார்… அண்ணாமலை

அவர் மேலும், ‘’பிரதமர் பங்கேற்ற மேன் vs வைல்ட் நிகழ்ச்சி உத்தரகாண்ட்டில் கடுமையான காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டது. ஆனால், ராகுல்காந்தியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சி கரூர் அருகே அரவக்குறிச்சியில் எடுக்கப்பட்டது. திமுகவினர் எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை, வசனத்தில் ராகுல்காந்தி நடித்துக்கொடுத்தார். காளாண் பிரியாணியும் தயிர் பச்சடியும் செய்து காட்டினார்’’என்றார்.

திமுக எழுதிக்கொடுத்த கதை,திரைக்கதை,வசனத்தில் ராகுல் நடித்தார்… அண்ணாமலை

மேலும் அது குறித்து, ‘’மக்களை குழப்பி டுவிட் போட வைப்பதுதான் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வேலை. உள்நாட்டில் செல்வாக்கு இல்லை என்பதால் வெளிநாட்டில் சென்றுஅங்கிருந்து டுவிட் போட வைப்பதுதான் ராகுலின் மேன் vs வைல்ட் ஆக பார்க்கிறேன்’’என்றார்.