அரசியலை விட்டு ஒதுங்க சசிகலா முடிவு! ஈபிஎஸ் -ஓபிஎஸ் -ன் அந்த மெசேஜ்க்காக காத்திருப்பு!

 

அரசியலை விட்டு ஒதுங்க சசிகலா முடிவு!  ஈபிஎஸ் -ஓபிஎஸ் -ன் அந்த மெசேஜ்க்காக காத்திருப்பு!

சசிகலா வெளியே வந்தால் அப்படி இப்படி என்று கூண்டுக்குள் இருந்து வெளியே வரும் சிங்கம் மாதிரிதான் பேசி வந்தார்கள். ஆனால், சசிகலாவின் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கிறது.

அத்தனை வேகமாக ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சபதம் செய்தது மாதிரியான அதிரடியில் இப்போது இல்லை சசிகலா என்கிறார்கள். அளவு கடந்த அமைதியில் அவர் இருப்பதாகவே சொல்கிறார்கள்.

அரசியலை விட்டு ஒதுங்க சசிகலா முடிவு!  ஈபிஎஸ் -ஓபிஎஸ் -ன் அந்த மெசேஜ்க்காக காத்திருப்பு!

சிறை தந்த ஞானமோ, வயது மற்றும் உடல் பிரச்சனைகளினால் எடுத்த முடிவோ என்று தெரியவில்லை. தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்.

சிறை மட்டும் கொரோனாவிலிருந்து விடுதலை ஆன சசிகலா, நந்திமலை அருகே இருக்கும் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உறவினர்கள், மருத்துவர்கள் என்று அவருடன் 12 பேர் உடனிருக்கிறார்கள்.

அரசியலை விட்டு ஒதுங்க சசிகலா முடிவு!  ஈபிஎஸ் -ஓபிஎஸ் -ன் அந்த மெசேஜ்க்காக காத்திருப்பு!

விடுதலையானதும் அவரிடமிருந்து வேங்கை பாய்ச்சலை எதிர்பார்த்த அரசியல் பிரமுகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. தீவிர அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கவே நினைக்கிறாராம். ஆனால், தனக்காக அமமுகவினை தொடங்கி பாடுபட்டு வரும் தினகரனுக்கு ஒரு வழி காட்டிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைக்கிறாராம். அதற்கு, அமமுகவை அதிமுகவோடு இணைத்துவிடலாம் என்றும் முடிவெடுத்துள்ளாராம்.

தினகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும், அமமுகவில் இருக்கும் 35 பேருக்கு சீட் தரவேண்டும், அதுவும் அவர்கள் கேட்கும் தொகுதியில் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம் சசிகலா. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் அமமுகவை அதிமுகவோடு இணைத்துவிட்டு தான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடலாம் என்றிருக்கிறாராம்.

அரசியலை விட்டு ஒதுங்க சசிகலா முடிவு!  ஈபிஎஸ் -ஓபிஎஸ் -ன் அந்த மெசேஜ்க்காக காத்திருப்பு!

அமமுக தனித்து போட்டியிட்டால் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு 65 இடங்களில் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று சில சர்வே முடிவுகள் தெரிவித்திருப்பதாலும், அமமுக தனித்து போட்டியிட்டால் 50 இடங்களில் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்று துக்ளக் குருமூர்த்தி அழுத்தமாக சொல்வதையும் அதிமுக கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் என்கிறார்கள்

சசிகலாவின் நிபந்தனையை ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அதற்கான தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல்.

அரசியலை விட்டு ஒதுங்க சசிகலா முடிவு!  ஈபிஎஸ் -ஓபிஎஸ் -ன் அந்த மெசேஜ்க்காக காத்திருப்பு!

வரும் 8ம் தேதி அன்றைக்கு சுப முகூர்த்த தினம் என்பதால் அன்றைக்கு தமிழகம் வர முடிவெடுத்துள்ள சசிகலா, அதற்குள் அதிமுகவிடம் இருந்து தனக்கு நல்ல பதில் வரும் என்று எதிர்ப்பார்த்திருக்கிறாராம்.

ஒருவேளை அதிமுக – அமமுக இணையாத பட்சத்தில் சசிகலாவின் அரசியலில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவில் மாற்றம் இருக்கலாம் என்றும் தெரிகிறது.