விதியே விதியே என்செய நினைத்தாய்.. ராமதாஸ் விரக்தி

 

விதியே விதியே என்செய நினைத்தாய்.. ராமதாஸ் விரக்தி

விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

விதியே விதியே என்செய நினைத்தாய்.. ராமதாஸ் விரக்தி

வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக 6 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறது. போராட்டங்களுக்கு இடையில் அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறது.

இதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுகவும் பாமகவும் அறிவிக்காமல் இருந்த நிலையில், இன்றைக்கு பாமக நிறுவர் ராமதாஸ் இந்த டுவிட்டினை பதிவிட்டிருக்கிறார்.

பேச்சுவாத்தையில் சுமுகம் ஏற்பட்டு நேற்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார் என்று தகவல் வந்தது. ஆனால் இந்த சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில் இன்றைக்கு இந்த விரக்தியினை வெளிப்படுத்தி இருக்கிறார் ராமதாஸ்.