அம்மாப்பேட்டை சாதி வெறியாட்டம்… விசிக எம்.பிக்கள் கண்டனம்

 

அம்மாப்பேட்டை சாதி வெறியாட்டம்… விசிக எம்.பிக்கள் கண்டனம்

தலித்துகள் மீதான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தாமல் மறைமுகமாக ஊக்குவிக்கிறதா அதிமுக அரசு? காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர்
தஞ்சை அம்மாபேட்டையில் தலித் இளைஞர்மீது வன்கொடுமை செய்த சாதி வெறியர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமார்.

அம்மாப்பேட்டை சாதி வெறியாட்டம்… விசிக எம்.பிக்கள் கண்டனம்

தஞ்சாவூர்,அம்மாப்பேட்டையில் நடந்துள்ள சாதிவெறியாட்டம் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள தலைகுனிவாகும். காவல்துறை வழக்கம்போல மெத்தனம் காட்டுவது வெட்கக்கேடாகும்.தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிசெயலில் ஈடுபட்டோரைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் விசிக எம்.பி. திருமாவளவன்.

தஞ்சாவூர் அருகே கும்பல் ஒன்று காட்டுமிராண்டித் தனமாக ஒரு நபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் வசித்து வருபவர் ராகுல்(22). இவர் மணல் திருடி விற்பனை செய்து வரும் ஒரு நபரிடம் வேலை பார்த்து வரும் நிலையில், பணத்தை திருடியதாக ஒரு கும்பல் இவரை சரமாரியாக தாக்கிய வீடியோ இன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ராகுலின் கண்ணைக் கட்டிய கும்பல் கம்பை எடுத்து அவரை கதற கதற தாக்குகிறது.

‘என்னை விட்ருங்க’ என ராகுல் கெஞ்சியும் அடிப்பதை நிறுத்த மறுத்த அந்த கும்பல், ராகுலை குனிய வைத்து காலில் கம்பை வைத்து அடிக்கிறது. ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத ராகுல், அங்கேயே மயங்கி விழுகிறார். ராகுலை அந்த கும்பல் தாக்குவதை வீடியோ எடுத்த கும்பலின் தலைவன், சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து இருக்கிறார்.

அம்மாப்பேட்டை சாதி வெறியாட்டம்… விசிக எம்.பிக்கள் கண்டனம்

ராகுல் தாக்கப்பட்டதற்கான காரணம் பற்றி ஆராய்ந்ததில், அவர் ஒரு வீட்டில் ரூ.30,000 பணத்தை திருடிவிட்டதாகவும் அதனால் அவர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ராகுலை கதற கதற அடித்து உதைத்த கும்பலை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு விசிக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.