திமுகவின் முடிவு.. நிர்வாகிகளுக்கு வைகோ சொன்ன ஆறுதல் வார்த்தைகள்

 

திமுகவின் முடிவு.. நிர்வாகிகளுக்கு வைகோ சொன்ன ஆறுதல் வார்த்தைகள்

மதிமுக, மக்கள் நலக்கூட்டணி என்று கடந்த காலங்களில் திமுகவுக்கு எதிராகவும், ஸ்டாலினுக்கு எதிராகவும் தீவிர செயல்பாடுகளில் இறங்கிவிட்டதால், சந்தித்தது எல்லாம் இழப்புகள் தானே தவிர வேறொன்றும் பெரிதாக இல்லையே என்பதை உணர்ந்துதான் இந்த முறை ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக களமிறங்கிவிட்டாராம் வைகோ.

திமுகவின் முடிவு.. நிர்வாகிகளுக்கு வைகோ சொன்ன ஆறுதல் வார்த்தைகள்

சென்னையில் நடந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், லோக்சபா தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்ததுபோல் சட்டமன்ற தேர்தலிலும் தொடர மதிமுக உறுதியாக இருக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருந்தாலும், திமுகவுடன் தான்கூட்டணி என்பதில் வைகோ உறுதியாக இருக்கிறாராம். இரட்டை இலக்கத்தில் கேட்ட வைகோவுக்கு, வெறும் இரண்டுதான் என்று சொல்லப்பட்டு வந்தாலும், அதுவும் கூட இல்லை என்றாலும் திமுகவுக்கு ஆதரவளிக்க தயார் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாராம்.

திமுகவின் முடிவு.. நிர்வாகிகளுக்கு வைகோ சொன்ன ஆறுதல் வார்த்தைகள்

அதனால்தான், ‘’எம்.எல்.ஏ. , எம்.பி. சீட்டுக்கெல்லாம் ஆசைப்படாதீங்க. கட்சிக்காக கொடி கட்டுற உறுப்பினர் எல்லாம் பதவியை எதிர்பார்த்தா செய்யுறாங்க..’’என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இருக்கிறாராம்.