“வென்டிலேட்டரில் இருந்த பெண்ணை வேட்டையாடிய மிருகம்” -தனியார் மருத்துவமனையில் நடந்த அநியாயம்

 

“வென்டிலேட்டரில் இருந்த பெண்ணை வேட்டையாடிய மிருகம்” -தனியார் மருத்துவமனையில் நடந்த அநியாயம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த நபரை போலீஸ் தேடுகிறது .


ஹாரியானா மாநிலம் குருகிராமில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது .அந்த மருத்துவமனைக்கு கடந்த வாரம் அக்டோபர் 21ம் தேதி மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார் .அப்போதைக்கு அவரை அங்கிருந்த டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தி மயக்க நிலையில் வைத்திருந்தார்கள்
இதையறிந்த விகாஸ் என்ற வாலிபர் அந்த தீவிர சிகிச்சைப்பிரிவுக்குள் நுழைந்து அந்த மயக்க நிலையில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் .இந்த விவகாரம் அந்த பெண் தனது தந்தைக்கு எழுதிய மூன்று பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதனால் அந்தப் பெண்னின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணை விசாரிக்க போனார்கள் .அப்போது அந்த பெண் மயக்க நிலையில் இருந்தததால் அவரிடம் விசாரிக்க முடியவிலை .
“இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் மருத்துவமனையில் பணியாற்றுகிறாரா இல்லையா என்பது கூட பெண்ணின் பெற்றோருக்குத் தெரியாது. இந்த சம்பவம் குறித்து நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரித்து வருகிறோம். அந்தப் பெண் தனது வாக்கு மூலத்தை அளித்த பின்னரே நிலைமை தெளிவாகத் தெரியும் மேலும் விசாரணை நடந்து வருகிறது, ”என்று போலீசார் கூறினார்கள்

“வென்டிலேட்டரில் இருந்த பெண்ணை வேட்டையாடிய மிருகம்” -தனியார் மருத்துவமனையில் நடந்த அநியாயம்