சென்னையில் இதுவரை 21.46 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

 

சென்னையில் இதுவரை 21.46 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

சென்னையில் இதுவரை 21,46,680 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை 21.46 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

சென்னையில் தடுப்பூசி முகாம்களின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 லட்சத்து 59 ஆயிரத்து 783 நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியையும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 897 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 09.06.2021 வரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66.31 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது