21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு…தொப்புள் கொடியுடன் தூக்கிவீசப்பட்ட பச்சிளம் குழந்தை: நடுங்க வைக்கும் காரணம்!
இந்த குடியிருப்பின் காவலாளி ஒருவர் நேற்று மதியம் அலறல் சத்தத்துடன் கத்தியுள்ளார்.
மும்பை புறநகர்ப்பகுதியான லால்ஜிபதா பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் காவலாளி ஒருவர் நேற்று மதியம் அலறல் சத்தத்துடன் கத்தியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று உடல் சிதறி இறந்து கிடந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் தொப்புள் கொடி கூட நீக்கப்படாமல் தூக்கி வீசப்பட்ட அந்த குழந்தை 17 வது தளத்தில் வீசப்பட்டிருப்பதாகவும், கணவர் மீதான கோபத்தில் பெண் ஒருவர் பாத்ரூமிலேயே குழந்தையைப் பெற்று அதை 17 வது மாடியில் தூக்கி வீசியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடியிருப்பிலிருந்த சி.சி.டி.வி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.