அதிமுகவின் பொய் நாடகம்… ஆதாரத்தை காட்டும் திமுக எம்.பி.

 

அதிமுகவின் பொய் நாடகம்… ஆதாரத்தை காட்டும் திமுக எம்.பி.

2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழகம் உலகநாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது என்றும், தேசிய அளவில் எராளமான விருதுகளை பெற்று வெற்றி நடை போடுகிறது தமிழக அரசு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன ஆளுநர் உரையில்.

அதிமுகவின் பொய் நாடகம்… ஆதாரத்தை காட்டும் திமுக எம்.பி.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும் என்றும் ஆளுநர் உரையில் இருந்தது. ஆனால் இது உண்மையில்லை என்கிறார் திமுக எம்.,பி. டாக்டர் செந்தில்குமார்.

’’அடிமை அதிமுகவின் பொய் நாடகம். மத்திய கல்விதுறை அமைச்சர் ரமேஷ் பொகரியல் எனக்கு ஜனவரி 22 அனுப்பிய கடிதத்தில் மூன்று மொழி கொள்கை அமல்படுத்தப்படும் என்று நான் கேட்ட இரு மொழி கொள்கை குறித்த விளக்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். திமுக உறுதியாக மூன்று மொழி கொள்கைக்கு இடம் அளிக்காது.’’என்கிறார்.