வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்… அமீர்

 

வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்… அமீர்

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசியபோது, நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதைக்கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கல்யாணராமன் மீது 8 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.

வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்… அமீர்

இதுகுறித்து இயக்குநர் அமீர், ‘’தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறைத் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும், ‘’இது போல் ஒரு நச்சுக் கருத்தை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்’’என்கிறார் அமீர்.

வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்… அமீர்

’’தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கல்யாணராமன் மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகிய இருவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறேன்’’என்று அவர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.