திருமாவளவனுக்கு மூளை தேவை… காயத்ரி ரகுராம்

 

திருமாவளவனுக்கு மூளை தேவை… காயத்ரி ரகுராம்

2021 -2022ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டினை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறை , கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

திருமாவளவனுக்கு மூளை தேவை… காயத்ரி ரகுராம்

கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து இந்த பட்ஜெட்டில் சுகாதார கட்டமைப்புகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன், ‘’ முதல்முறையாக ‘காகிதமில்லா’ பட்ஜெட். வழக்கம்போல மக்களுக்கு ‘பயனில்லா’ பட்ஜெட். இது நாட்டு ‘வளர்ச்சிக்கானது’ அல்ல; மோடி நண்பர்களுக்கு நாட்டை ‘விற்பதற்கானது’. எல்ஐசி,பாரத் பெட்ரோலியம் துறைமுகங்கள், ஏர்இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களையும் நிலங்களையும் விற்கப்போகும் பட்ஜெட்..’’ என்று தெரிவித்திருந்தார்.

திருமாவளவனுக்கு மூளை தேவை… காயத்ரி ரகுராம்

இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுமாம், ‘’பட்ஜெட்டினை புரிந்துகொள்ளும் அளவுக்கு மூளை தேவை’’என்று தெரிவித்துள்ளவர், ‘’பப்பு பல்கலைக்கழகத்தின் தோல்வி மாணவர்கள் எல்லோரும் பட்ஜெட்டை புரிந்துகொள்ளாமல், பட்ஜெட் குறித்து பொய் சொல்லுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

‘’பாஜக அரசு எதையும் மறைக்கவில்லை. வெளிப்படையானது. காங்கிரஸ், திமுக, விசிக பின்வாங்கியது ஏன் என்று மக்களுக்கு தெரியவரும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.