பிறந்தநாளில் மூடு அவுட்டான அழகிரி: ஆதரவாளர்களை சந்திக்க மறுப்பு

 

பிறந்தநாளில் மூடு அவுட்டான அழகிரி: ஆதரவாளர்களை சந்திக்க மறுப்பு

ஆதரவாளர்கள் கூட்டத்தில் விரைவில் தனது முடிவினை அறிவிப்பதாக அழகிரி சொல்லி இருந்ததால் அவரது பிறந்தநாளில் அறிவிக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகிப்போனது. கட்சி அறிவிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வெகு அமைதியாக இருக்கிறார் அழகிரி.

பிறந்தநாளில் மூடு அவுட்டான அழகிரி: ஆதரவாளர்களை சந்திக்க மறுப்பு

அழகிரி பிறந்தநாள் என்றால் மதுரையே குலுங்கும். ஆனால், கருணாநிதியின் மரணத்தை அடுத்து இரண்டு வருடங்களாக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தினை தள்ளி வைத்திருந்த அழகிரி, இந்த வருடம் கொண்டாடினார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொண்டர்களுடன் கொண்டாட்டத்தினை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்.

இந்த பிறந்தநாளைக்கு‘’ஐபேக் தேவையில்லை. ஆட்சியை அமைக்க கலைஞர் மூளை உங்கள் அண்ணன் அஞ்சாநெஞ்சர் போதும்..’’ என்றும், ‘’சேர்த்தால் உதயம் தவிர்த்தால் அஸ்தமனம்’’ என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

பிறந்தநாளில் மூடு அவுட்டான அழகிரி: ஆதரவாளர்களை சந்திக்க மறுப்பு

அழகிரி இரண்டு நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், ஸ்டாலின் அதற்கு சம்மதம் சொல்லுவார் என்றும் பலரும் சொல்லி இருப்பதாலும், மீண்டும் திமுகவில் இணைந்துவிடலாம் என்ற முடிவில் இருக்கும் அழகிரியின் மனதை அறிந்துதான் ஆதரவாளர்களும் இப்படி போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள்.

ஆனாலும் திமுகவில் இருந்து இன்னமும் எந்த பதிலும் வராத நிலையில், அப்செட்டில் இருக்கும் அழகிரி தொண்டர்களுடனான சந்திப்பை கூட தவிர்த்திருக்கிறார். ஆதரவாளர்கள் பலரும் நேரில் வருவதாக சொல்லியும் அவர்களை நேரில் சந்திக்க மறுத்து, போனிலேயே வாழ்த்துக்களை பெற்று வருகிறார் அழகிரி.