திருந்த மாட்டானுக… ஸ்டாலினை விளாசிய எச்.ராஜா

 

திருந்த மாட்டானுக… ஸ்டாலினை விளாசிய எச்.ராஜா

திமுக இந்து விரோத கட்சி என்றும், ஸ்டாலின் இந்து விரோதி என்றும் பாஜகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். அதற்கேற்றார் போலவே ஸ்ரீரங்கத்தில் பூசிய விபூதியை உடனே ஸ்டாலின் அழித்ததும், பசுபொன் தேவர் நினைவிடத்தில் கொடுத்த விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டியதும் கடும் சர்ச்சை ஆனது.

கந்த சஷ்டிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டது திமுகதான் என்றும், திமுதான் அந்த கறுப்பர் கூட்டம் என்றும் பேசிய பாஜக, திமுகவின் கந்தசஷ்டி எதிர்ப்புக்கு எதிராகத்தான் வேல்யாத்திரையினை நடத்தியது.

திருந்த மாட்டானுக… ஸ்டாலினை விளாசிய எச்.ராஜா

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், தேர்தல் நேரத்தில் இது பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து திமுகவும் வேலினை கையில் எடுத்தது. திருத்தணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினுக்கு வேலினை பரிசாக கொடுத்தனர் திமுகவினர். ஸ்டாலினும் அதை வாங்கிக்கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்தார்.

இதனால், இந்துக்களின் வாக்கு வேண்டுமென்றால் கோயில் வாசலில் நின்று பஜனை பாட கூட தயங்கமாட்டான் பகுத்தறிவு திராவிடன் என்று பத்திரிகையாளர் சோ சொன்னது உண்மையாகிறது என்று பாஜகவினர் விமர்சித்தனர்.

திருந்த மாட்டானுக… ஸ்டாலினை விளாசிய எச்.ராஜா

’’வேல் தூக்கி வேடம் போடும் ஸ்டாலின்’’என்று பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சாடியிருந்தார். மேலும், தேர்தலுக்காக ஸ்டாலின் நடத்தும் நாடகம் இது. உண்மையிலேயே ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது மரியாதை இருந்தால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லச்சொல்லுங்கள் என்றார். எச்.ராஜா சொன்னது மதிரியே, தைப்பூசத்திற்கு தமிழக பொதுவிடுமுறை அறிவித்திருக்கும் நிலையிலும் தைப்பூச திருநாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை ஸ்டாலின்.

இதுகுறித்து எச்.ராஜா, ‘’இந்துக்களே சிந்திப்பீர்… 8 கிலோ வெள்ளி வேல் என்றவுடன் அதை வாங்கிக் கொண்டு போஸ் கொடுத்த ஸ்டாலின் தைப்பூசத்திற்கு இன்று வாழ்த்துச் சொன்னாரா? இந்து விரோதி திருந்த மாட்டானுக. தேர்தலில் இந்து விரோத திமுகவை தோற்கடிப்பதே தீர்வு.’’ என்று சாடியிருக்கிறார்.