சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

 

சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

தமிழ் – தமிழர் அடையாளம் – அவர்தம் நலன் காக்கும் போரில் என்றைக்கும் முதல் வரிசையில் நிற்கும் தி.மு.கழகத்தில் இணைத்து கொண்டுள்ள அன்பு சகோதரர் இராஜீவ்காந்தியை அன்போடு வரவேற்கிறோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

நாம் தமிழர் கட்சி்யின் முக்கிய நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி இருவரும் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அக்கட்சியில் இருந்து விலகினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ராஜீவ்காந்தி.

சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

திமுகவில் இணைந்தது குறித்து ராஜீவ்காந்தி, ‘’தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்னும் கருத்தியலில் உறுதியாக நின்று சமூகநீதி,மாநில உரிமை,
மதச்சார்பின்மை,சனாதன எதிர்ப்பு என்னும் அரசியலோடு திராவிட கருத்தியலின் முகவரியாய் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்! ’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நாம் தமிழர் என்று கட்சியின் பெயர் வைத்ததோடு அல்லாமல், தமிழர், தமிழர் பண்பாடு என்று அதிகம் முழங்கி வருபவர் சீமான். அப்படி இருக்கையில், நாம் தமிழர் கட்சியை விட திமுகதான் தமிழர் நலனின் அக்கறை கொண்ட கட்சி அதனால் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டேன் என்கிற ரீதியில் ராஜீவ்காந்தியின் பதிவு இருந்தது.

இந்த பதிவுக்கு பதில் பதிவு போட்டுள்ள உதயநிதி, தமிழ் – தமிழர் அடையாளம் – அவர்தம் நலன் காக்கும் போரில் என்றைக்கும் முதல் வரிசையில் நிற்கும் தி.மு.கழகத்தில்…என்று சொல்வதன் மூலம், நாம் தமிழர் கட்சியை விட திமுகதான் தமிழர் அடையாளம் என்றும், தமிழர் நலன் காப்பதில் திமுகதான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.