புதுக்கட்சி: ரஜினி ரசிகர்களுக்கு அர்ஜூன மூர்த்தி அழைப்பு

 

புதுக்கட்சி: ரஜினி ரசிகர்களுக்கு  அர்ஜூன மூர்த்தி அழைப்பு

புதுக்கட்சி தொடங்கும் அர்ஜூன மூர்த்தி, தனது கட்சியில் சேர ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புதுக்கட்சி: ரஜினி ரசிகர்களுக்கு  அர்ஜூன மூர்த்தி அழைப்பு

ரஜினிகாந்த் தொடங்குவதாக இருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் அர்ஜூன மூர்த்தி. ரஜினியுடன் இணைந்ததால் பாஜகவில் வகித்து வந்த தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தபிறகு அமைதியாக இருந்து வந்த அர்ஜூன மூர்த்தி தானே ஒரு புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.

தான் கட்சி தொடங்கவில்லை என்பதால், தனது ரசிகர்கள் விருப்பப்பட்ட கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று ரஜினி, தனது மன்றத்து மூலமாக அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் பலரும் வேறு வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர்.

புதுக்கட்சி: ரஜினி ரசிகர்களுக்கு  அர்ஜூன மூர்த்தி அழைப்பு

இந்நிலையில் இன்று தான் தொடங்கவிருக்கும் கட்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறேன். எனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் முற்றிலும் பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ரஜினியின் படத்தையோ ரஜினி சொன்ன வார்த்தைகளையோ என் கட்சியில் பயன்படுத்த மாட்டேன்’’ என்று உறுதி கொடுத்தார்.

‘’ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து பணியாற்றலாம்’’ என்றும் அழைப்பு விடுத்தார் அர்ஜூனமூர்த்தி.

புதுக்கட்சி: ரஜினி ரசிகர்களுக்கு  அர்ஜூன மூர்த்தி அழைப்பு
புதுக்கட்சி: ரஜினி ரசிகர்களுக்கு  அர்ஜூன மூர்த்தி அழைப்பு