அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி. ஆவேசம்

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி.  ஆவேசம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி.  ஆவேசம்

வாங்க, ஒரு கை பார்ப்போம் என்று தமிழத்தில் ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரங்களில் நெசவாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டும், டீ கடையில் அமர்ந்து டீ குடித்தும் பொதுமக்களை கவர்ந்து வருகிறார் ராகுல். இன்றைக்கும் கூட கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுடன் அமர்ந்து மண் சட்டியில் சாப்பிட இருக்கிறார் ராகுல்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி.  ஆவேசம்

கரூர் வரும் ராகுலை வரவேற்று, இந்தியாவின் நம்பிக்கை, விவசாயிகளின் விடிவெள்ளி வருக..வருக.. என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை அதிமுவினர் கிழிக்கின்றனர் என்றும்,அமைச்சர்தான் அதற்கு காரணம் என்றும் ஜோதிமணி எம்.பி. குற்றம்சாட்டி இருக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி.  ஆவேசம்

அவர், ‘’தலைவர் ராகுல்காந்திக்கு கிடைக்கும் அன்பையும்,வரவேற்பையும் பார்த்து அதிமுக அதிர்ந்து போயிருக்கிறது. கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கிறது. தலைவரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அதிமுகவினர் கிழித்து வருகின்றனர். இது தான் தோல்விபயம் !’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ோதி