சாதிப்பாசத்தால பாமகவை திமுகவுக்குள் கொண்டு வர துடிக்கல… ஸ்டாலினிடம் உருகிய துரைமுருகன்

 

சாதிப்பாசத்தால பாமகவை  திமுகவுக்குள் கொண்டு வர துடிக்கல… ஸ்டாலினிடம் உருகிய துரைமுருகன்

சாதி பாசத்தால தான் பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர துரைமுருகன் ரொம்ப மெனக்கெட்டு கொண்டிருக்கிறார் என்ற பேச்சு ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது. திமுக சீனியர்கள் சிலரும், பாமக வந்துதான் நாம ஜெயிக்க முடியும் என்கிற நிலைமை இல்லை. அப்படியிருக்கும்போது பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டுவர துரைமுருகன் ஏன் இப்படி துடிக்கிறார் என்று ஸ்டாலினிடம் புகார் வாசித்திருக்கிறார்கள்.

சாதிப்பாசத்தால பாமகவை  திமுகவுக்குள் கொண்டு வர துடிக்கல… ஸ்டாலினிடம் உருகிய துரைமுருகன்

இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததும், இதுகுறித்து ஸ்டாலினிடம் மனம் உருகி பேசியிருக்கிறார் துரைமுருகன். ’’திமுக கூட்டணி கூட்டணியில் பாமக வந்தாதான் ஜெயிக்க முடியும் என்கிற நிலைமை இல்லைதான். ஆனால் வடமாவட்டங்களில் நாம் கொஞ்சம் திணற வேண்டியது இருக்கும். அதற்காகத்தான் அப்படி ஒரு நிலைமை எதற்கு என்று யோசித்து தான் பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டுவர பேசிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி சாதி பாசத்தால நான் பாமகவை கொண்டுவர துடிக்கல’’என்று சொல்லி இருக்கிறார் துரைமுருகன்.

சாதிப்பாசத்தால பாமகவை  திமுகவுக்குள் கொண்டு வர துடிக்கல… ஸ்டாலினிடம் உருகிய துரைமுருகன்

மேலும், ‘’பாமகவை திமுகவுக்கு கொண்டு வந்துவிட்டால் அதிமுக வடமாவட்டங்களில் போராட வேண்டியதாக இருக்கும். அதுமட்டுமல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட அவரது சட்டமன்ற தொகுதியில் தோற்று விடும் நிலை நிச்சயம் வரும். அதற்காகத்தான் அதையும் யோசித்து பார்த்துதான் பாமகவை திமுகவுக்கும் கொண்டுவர நினைக்கிறேன். ஆனால், எல்லோரும் சொல்வது மாதிரி எனக்கொன்றும் சாதிப்பாசம் கிடையாது’’என்று ஸ்டாலினுடன் மனம்திறந்து பேசியிருக்கிறார் துறைமுருகன்.

திருத்தணி அருகே நேற்று முன் தினம் திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. அன்றைய இரவுதான் ஸ்டாலினுடம் பாமக விவகாரம் குறித்து மனமுருகி இருக்கிறார் துரைமுருகன்.