நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

 

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தான் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசியபோது தொண்டர்களிடம் கடுமை காட்டினார்.

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

’’உலகமே என் பேச்சைக் கேட்கும். ஆனால் நான் பிரபாகரன் பேச்சை தவிர வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டேன். இங்கே நான் தான் கட்டளைத்தளபதி. உங்களின் கருத்துக்களை கேட்டு நான் நடக்க மாட்டேன்.

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

நான் வேட்பாளர்களை அறிவித்த பிறகு யாரேனும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சேரன் பாண்டியன் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி போல் தான் ஆகிவிடும். கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்’’ என்று தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் சீமான்

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

அவர் மேலும், ’’நான் அறிவித்த வேட்பாளர் குறித்து என்னிடம் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது. நான் போட்ட போட்டிருந்தான் நீங்கள் செயல்பட வேண்டும். நான் எந்த திசையை நோக்கி ஓடுகின்றேனோ, அந்த திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நாம் தமிழர் என்ற கட்சிக்கு, நாம் தமிழர் என்ற கப்பலுக்கு ஒரே மாலுமி தான். அது நான் தான். இதற்கு சம்மதம் என்றால் என் மீது நம்பிக்கை இருந்தால் என்னோடு தொடர்ந்து பயணம் செய்யலாம். இல்லை என்றால் கட்சியை விட்டு புறப்பட்டு விடுங்கள்’’ என்று தொண்டர்களிடம் கடுமை காட்டினார் சீமான்.

சீமானின் இந்த பேச்சு தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது
.