பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

 

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அதிமுகவை அவர் கைப்பற்றி விடுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு தகுந்தமாதிரி அதிமுகவினரும், அதிமுக அமைச்சர்கள் சிலரும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் அவர்களை எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்து இருப்பதாக தகவல்கள் வந்தன.

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்


சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது என்பது நூறு சதவிகிதம் கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக சொல்லியிருக்கிறார். ஆனாலும் தன் பேச்சையும் மீறி சசிகலா விடுதலையாகும் நாளில் அதிமுக நிர்வாகிகளும் அதிமுகவினரும் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள். அவரை வரவேற்க போய்விடுவார்கள் என்று நினைத்துதான் சசிகலா விடுதலை ஆகும் நாளிலேயே அதாவது வரும் 27-ஆம் தேதி அன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைப்பதாக ஏற்பாடு செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள்.

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் இத்தனை தீவிரமாக இருக்கும்போது, துணை முதல்வர் ஓ. பி. பன்னீர்செல்வமோ, ஆட்சியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி பாதி பங்கு உண்டு என்று தொடர்ந்து பேசி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அமமுகவினர் வேறு டெல்லியில் முகாமிட்டு சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜகவுடன் பேசி வருவதாக தகவல் வருகிறது. அதனல்தான், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளத்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷா மோடியை சந்தித்து பேசியதாகவும் தகவல்.

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

நிலைமை இப்படி இருக்க அதிமுக கூட்டணியினரோ, சசிகலாவுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறார்கள்.

பிஜேபி மூத்த தலைவர் இல. கணேசன், சசிகலா வரட்டும். அவரால் அதிமுகவுக்கு எந்த துரோகமும் நடக்காது. அவர் துரோகம் செய்யமாட்டார் என்று அடித்துக் கூறுகிறார்.

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஒரு பெண் என்ற முறையில் சசிகலா விடுதலையை வரவேற்கிறேன் என்று கூறியவர், தமிழக அரசியலில் சசிகலா நிச்சயம் பங்குபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

கட்சிக்குள் தான் தனக்கு எதிராக பலரும் திரும்பி இருக்கிறார்கள் என்றால் கூட்டணிக் கட்சியினரும் தனக்கு எதிராக திரும்பி இருப்பதால் அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.