தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க கன்னட வெறியர்கள் நடத்தும் ஒற்றுமை மாநாடு… முதல்வருக்கு எச்சரிக்கை

 

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க  கன்னட வெறியர்கள்  நடத்தும் ஒற்றுமை மாநாடு… முதல்வருக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளியில் வரும் 26.1.2021 அன்று, தேசபிரேமிகளா சேனை என்ற கன்னட அமைப்பும், கர்நாடகத்திலே உள்ள தமிழ் அமைப்பு ஒன்றும் இணைந்து ‘கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு’ நடத்த இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. கர்நாடகத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தாக்கியும், தமிழர்களின் பேருந்துகளையும் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் எரித்தும் இனவெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட வெறியர்களின் மறைமுகத் தமிழர் தாயக ஆக்கிரமிப்பு மாநாடுதான் இந்த மாநாடு என்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்.

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க  கன்னட வெறியர்கள்  நடத்தும் ஒற்றுமை மாநாடு… முதல்வருக்கு எச்சரிக்கை

அவர் மேலும் இதுகுறித்து, அண்மையில்தான் தாளவாடிப் பகுதியில் தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாடு அரசு வைத்திருந்த வரவேற்புப் பெயர்ப் பலகையை கன்னடவெறி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராசன் தலைமையில் கன்னட வெறியர்கள் பிடுங்கி எறிந்து, அந்தப் பெயர்ப் பலகையிலுள்ள தமிழை அழித்து, தமிழ் எழுத்துகளைக் காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் நடத்திவிட்டு, எந்த சிக்கலும் இல்லாமல் திரும்பினார்கள். இந்த வன்முறையை காணொளியாக அவர்களே வெளியிட்டார்கள் என்றும்,

அந்தத் துணிச்சலில் கன்னட இனவெறி அமைப்பொன்று அங்குள்ள தமிழ் இனத்துரோக அமைப்பு ஒன்றுடன் இணைந்து, தமிழ்நாட்டிற்குள் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்துவது புதிய வடிவில் கன்னடர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும் என்றும் தெரிவிக்கும் மணியரசன்,

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க  கன்னட வெறியர்கள்  நடத்தும் ஒற்றுமை மாநாடு… முதல்வருக்கு எச்சரிக்கை

கிருட்டிணகிரி மாவட்டம், ஒகேனக்கல், தாளவாடி பகுதி முதலியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டுமென்று கன்னட அரசியல் கட்சிகளும், கன்னட இனவெறி அமைப்புகளும் ஆக்கிரமிப்புக் குரல் கொடுத்து வருகின்றன. இன்றைய கர்நாடகத்தின் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அத்துமீறி காவிரியின் குறுக்கே படகில் வந்து ஒகேனக்கலில் கன்னடக்கொடியேற்றி, ஒகேனக்கல்லை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டுமென முழக்கமிட்டுத் திரும்பினார்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த 2016 செப்டம்பர் 12ஆம் நாள், காவிரிச் சிக்கலை சாக்கு வைத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். மற்றும் பல நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளையும், சரக்குந்து களையும் கன்னட வெறியர்கள் பெங்களூரில் ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கினார்கள். எரிந்து முடியும் வரை கர்நாடகக் காவல்துறையினர் தலையிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர், சரக்குந்து ஓட்டுநர்களையெல்லாம் ஆடைகளைக் களைந்துத் தாக்கி படமெடுத்து விளம்பரம் செய்தார்கள். தமிழ்நாட்டு நடிகர்கள் நடித்த படங்கள் கர்நாடகத் திரையரங்குகளில் வெளியானால் கூட, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளைக் கிழித்து வெறியாட்டம் போடுகின்றனர். கன்னட மொழியுடன் தமிழிலும் பெயர்ப் பலகை இருந்தால் அந்தப் பெயர்ப் பலகைகளை உடைக்கின்றனர்’’ என்றும் கூறிய மணியரசன்,

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க  கன்னட வெறியர்கள்  நடத்தும் ஒற்றுமை மாநாடு… முதல்வருக்கு எச்சரிக்கை

ஓசூர் பகுதியில் கன்னட இனவெறி அமைப்பு நடத்தத் திட்டமிட்டுள்ள கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு என்பது கன்னட இனவெறியர்களின் இன்னொரு வடிவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இந்த மாநாட்டிற்கு அனுமதி மறுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். மீறுகின்றவர்களை எல்லையிலேயே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதில் கவனம் செலுத்தி, இம்மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.