எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

 

எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

மருத்துவம், கல்வி, தொழில் துறை, நீர் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளில், பிற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் புகழ் மகுடத்தில் இன்னொரு சாதனையாக, சாலை விபத்துகளைக் குறைத்ததில் தமிழகம் சாதனைப் படைத்ததற்காக மத்திய அரசின் விருதைப் பெற்று இருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற போது அவரது ஆளுமை திறன் மற்றும் நிர்வாக திறன் குறித்து எதிர்க்கட்சியினர், குறிப்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏளனமாக பேசி வந்தார். ஆனால், அவர் முதல்வராக பதவியேற்றதிலிருந்து தமிழகம் பல துறைகளில் எட்டுக்கால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. அதிகாரிகளை அதட்ட வேண்டிய இடத்தில் அதட்டியும் தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுத்தும் முறையாக கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி. அதுமட்டுமல்லாது கோட்டையிலேயே முடங்கி கிடக்காமல், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடி விசிட் அடித்து, அரசு நலத் திட்டப்பணிகளை, இதர நிர்வாக பணிகளையும் முடுக்கி விடுகிறார்.

நேரடி விசிட்டின்போது அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளை அழைத்து அவர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அதிகாரிகள் மத்தியில் ஏக ரெஸ்பான்ஸ். குறிப்பாக கொரோனா உச்சம் தொட்டிருந்த காலகட்டத்தில், நமக்கும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் பயப்படாமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவர் நேரடியாக விசிட் அடித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மூலம் முடுக்கி விட்டார். இதன் காரணமாகத்தான், கொரோனா பரவல் தடுப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக பெயரெடுத்தது. கொரோனா உயிரிழப்புகளும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவான விகிதத்திலேயே இருந்தது.

எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

இதற்கு தமிழகத்தில் சிறந்து விளங்கும் மருத்துவ கட்டமைப்புகள்தான் முக்கிய காரணம் என்பதாலும், அதிமுக அரசு அதில் துளி கூட சமரசம் செய்துகொள்ளாமல் கவனத்துடன் செயல்படுகிறது என்பதாலும் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் இதர மாநிலங்களும் தமிழகத்தை ஏக்கத்துடன் பார்த்தன.

தற்போது சாலை விபத்துகளைத் தடுப்பதிலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சாதனைப் படைத்து, அதற்கான மத்திய அரசின் விருதையும் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.

2016-ம் ஆண்டு முதல் 34% சாலை விபத்துக்களை தவிர்த்ததோடு, 54% சாலை விபத்தில் இறப்பவர்களை தடுத்து, இந்தியாவிலே சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாராட்டி உள்ளார்.

“சாலை விதிகள் பற்றியும் விபத்துகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமான மாநிலமாக உள்ளது” என்றும் அவர் விருது வழங்கும் விழாவில் பாராட்டித் தள்ளினார்.

எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

இது எப்படி சாத்தியமானது எனப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தால், “சாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு, 2018-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலையில் இருந்த 2000 மதுபான கடைகளை அகற்றியுள்ளது. சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளிப் பாடத்திட்டத்துடன் இணைத்து, மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது பற்றியும், சாலை விதிகளை மதிப்பது பற்றியும் காவலர்கள் மூலமாக விழிப்புணர்வுவை மேற்கொண்டு வருகின்றது.

உச்ச நீதிமன்றம் 2020-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் கூறியதை விட குறைத்து 54% உள்ள மாநிலமாக மாற்றினோம். வரும் காலத்தில் சாலை விபத்து பூஜ்ஜிய சதவீதம் உள்ள மாநிலமாக மாற்றுவோம்” என்கிறார்கள்.