மா.செ.,க்களிடம் ஸ்டாலின் சொன்ன சூசக தகவல்!

 

மா.செ.,க்களிடம்  ஸ்டாலின் சொன்ன சூசக தகவல்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர்.

மா.செ.,க்களிடம்  ஸ்டாலின் சொன்ன சூசக தகவல்!

பொள்ளாட்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்திடுக, மூன்று வேளாண் சட்டங்களையும் நிபந்தன இன்றி மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்டஏழு பேரையும் விடுதலை செய்க என்பன உள்ளிட்ட6 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மா.செ.,க்களிடம்  ஸ்டாலின் சொன்ன சூசக தகவல்!

மாவட்ட செயலாளர்களின் கருத்தை அறிந்த பின்னர் ஸ்டாலின் பேசியபோது, ’’இப்போதிருக்கும் கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நம்மோடு கடந்த ஐந்த ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கை கோர்த்து வரும் அக்கட்சியினரை நாம் கைவிடப்போவதுமில்லை. ஆனால், கூட்டணிக்கு சீட் குறைவாக கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். இன்னும் சில கட்சிகளும் திமுகவுடன் சேர விரும்புகின்றன. நான் தான் அந்த கட்சிகளுடன் கூட்டணி பேசாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்’’என்று பேசியிருக்கிறார்.

தொகுதிப்பங்கீட்டில் முரண்டு பிடித்தால், தூக்கி கடாசிவிட்டு , கிடப்பில் வைத்திருக்கும் கட்சிகளை உள்ளே இழுத்துவிடுவேன் என்பதைத்தான் கூட்டணி கட்சியினருக்கு சூசகமாக சொல்லி இருக்கிறார் என்கிறார்கள் மா.செ. கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.