ஸ்டாலின் பாமகவுல இருக்கிறாரா? திமுகவுல இருக்கிறாரா? மாங்காவ விடவே மாட்டேங்கிறார்… வைரலாகும் டாக்டரின் பேச்சு

 

ஸ்டாலின் பாமகவுல இருக்கிறாரா? திமுகவுல இருக்கிறாரா? மாங்காவ விடவே மாட்டேங்கிறார்… வைரலாகும் டாக்டரின் பேச்சு

எடப்பாடி என்று ஓர் ஊர் பெயர் இருக்கக் கூடாதா..? அத நீங்க எடுபுடி, டெட்பாடி என எதுகை, மோனையில் பேசினால், மனநலம் குன்றியவர்கள்தான் இப்படி பேசுவார்கள். உங்க மனநலம் எப்படி இருக்குனு செக் பண்ணிக்கோங்க என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிய ஸ்டாலினை விளாசித்தள்ளி இருக்கிறார் பிரபல டாக்டர் ஷாலினி.

ஸ்டாலின் பாமகவுல இருக்கிறாரா? திமுகவுல இருக்கிறாரா? மாங்காவ விடவே மாட்டேங்கிறார்… வைரலாகும் டாக்டரின் பேச்சு

ஒருவர் மனதில் என்ன நினைக்றார்களோ, அதைத்தான் பேசுவார் என்று மனநலத்துறை ஆய்வு சொல்கிறது. ஒருவர் கொச்சையா செக்ஸ் பத்தி அதிகமாக பேசுகிறார் என்றால், அவர் மனதில் செக்ஸ் அதிகமாக இருக்கும். ஒருவர் சாதி பத்தி அதிகமாக பேசினால், அவர் மனதில் சாதி வெறி அதிகம் இருப்பதாக அர்த்தம். ஒருவர் பெண்களை பற்றி கொச்சைப் படுத்தி பேசினால், அவருக்கு அப்படிதான் எண்ணங்கள், யோசனை இருக்கிறது என்று அர்த்தம் என்று, கொஞ்சம் விட்டிருந்தா சசிகால காலுக்குள்ளு புகுந்திருப்பாரு என்று பேசிய உதயநிதியை சாடுகிறார் ஷாலினி.

ஆட்சியில் இருக்கிற ஒரு முதலமைச்சரை 45 வயதுள்ள ஒரு மனிதர் இப்படி பேசினால், இது கூட பேசத் தெரியாதவங்ககிட்ட தலைமை பதவியை எப்படி கொடுக்கறது. இந்த பண்பு கூட இல்லாதவர் எப்படி தலைவர் ஆக முடியும். ஒரு விழிப்போட இருந்துதான் அவர்களை புறம் தள்ளி இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலின் ஒரு தலைவரா? ஏற்றுக் கொள்ள முடியல என்று சொல்லும் ஷாலினி,

இது பரவாயில்லை. அவரோட அப்பா(ஸ்டாலின்) வந்து மாங்காவ விடவே மாட்டேங்கிறாரு. அவர் பாமகவுல இருக்கிறாரா? திமுகவுல இருக்கிறாரா? என்று தெரியல. எப்போ பாரு… வாய் புளித்ததோ, மாங்காய் புளித்தது.. என்று சொல்கிறார் என அவரையும் சாடிய ஷாலினி,

’’ஒரு கல்லுல ரெண்டு மாங்கா, தமிழக மக்கள் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் தேர்தலையும், திமுக-அதிமுகவையும் மனதில் வைத்து.

ஷாலினியின் இந்த பேச்சு இணையங்களில் வைரலாகிறது.