பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

 

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

பத்து நாட்களாக திமுக படுத்தி எடுத்தும் பாமக பதில் சொல்லாமல் இருக்கிறது. திமுகவும் விடுவதாக இல்லை போலிருக்கிறது.

அதிமுகவுடன் பாமக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. ஆனால், சில நடைமுறை காரணங்களால் இன்னமும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது என்ற பேச்சு இருக்கும் நிலையில், திமுக இன்னமும் தங்களது கூட்டணிக்கு வர பாமகவிடம் மல்லுக்கட்டு நடத்துவதாகவே தெரிகிறது. விடாது கறுப்பு என்பது போல, திமுகவின் முரசொலி நாளிதழில் இன்று 7வது நாள், இன்று 8வது நாள், இன்று 9வது நாள், இன்று 10வது நாள் என்று தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாசுக்கு கேள்வி எழுப்பி வருகிறது.

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

எந்த ஒரு விசயத்துக்கும் அறிக்கை மூலமாகவோ, டுவிட்டர் மூலமாகவோ பதில் கொடுத்துவிடும் ராமதாசும் இதில் இன்னமும் மவுனமாக இருப்பதால், உள்ளடி விவகாரம் ஏதோ இருக்கிறது என்றே தெரிகிறது.

வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கிடு வேண்டும் என்று சொன்ன நீங்கள், இப்போது உள் ஒதுக்கீடு போதும் என்று பின் வாங்கியது ஏன்? வன்னியர் இன மக்கள் பயனடையும் வகையில் பல சட்டங்களை நிறைவேற்றிய திமுகவை எதிர்க்கிறீர்கள். ஆனால், இதுவரை பலமுறை நீங்கள் கூட்டணி சேர்ந்த அதிமுக வன்னிய இன மக்களுக்காக வைத்த எந்த கோரிக்கையையாவது நிறைவேற்றி இருக்கிறதா? வன்னிய மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத அதிமுக உங்களுக்கு இனிப்பதேன்? என்றும் ஆத்திரத்துடன் கடந்த வாரம் கேள்விகளை முன்வைத்திருந்த நிலையில், ‘இன்று 10வது நாள்…மருத்துவர் அய்யாவே பதில் எங்கே?’ என்ற தலைப்பில் அந்த கேள்விகளை முன்வைத்திருக்கிறது.

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

திமுக தலைவர் ஸ்டாலின் அன்று கூறியதை ஏற்க மறுத்த நீங்கள் இன்று அதே உள் ஒதுக்கீட்டை கேட்பதேன்? வன்னிய இனத்தவருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் இருந்து எந்த கட்டத்திலும் பின் வாங்கமாட்டேன் என்று 2 மாதங்களுக்கு முன்பு கூட சூளுரைத்தீர்களே.. இன்று பின் வாங்குவதேன்?

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

அதிக ஆண்டு காலம் ஆண்டதாக கூறிவரும் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு என்ன செய்தார்கள்? இந்த பல ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் பலமுறை அவர்களுடன் கூட்டணி வைத்தீர்களே, உங்கள் மகன் அன்புமணிக்கு எம்.பி., பதவி வாங்கியதை தவிர வன்னிய இன மக்களுக்கு பெற்றுத்தந்தது என்ன? இனி பாமக எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காது . தனித்தே தேர்தலை சந்திக்கும் என்றும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தீர்களே.. அதிலாவது இப்போதும் உறுதியோடு இருக்கிறீர்களா? உங்களது பதிலுக்காக 10வது நாளாக காத்திருக்கும் பாட்டாளி சொந்தம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

ராமதாசும் இப்போதைக்கு பதில் சொல்லப்போவதில்லை. சிந்துபாத் கதை போல இந்த கேள்வி பகுதியும் தொடரும் போலிருக்கிறது.