ரஜினி மன்றத்தின் மாஜி நிர்வாகிக்கு திமுகவில் மாநில பொறுப்பு!

 

ரஜினி மன்றத்தின் மாஜி நிர்வாகிக்கு திமுகவில் மாநில பொறுப்பு!

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஏ.ஜோசப் ஸ்டாலின், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி அண்மையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ரஜினி மன்றத்தின் மாஜி நிர்வாகிக்கு திமுகவில் மாநில பொறுப்பு!

திமுகவில் இணைந்த அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்இதை திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

ரஜினி மன்றத்தின் மாஜி நிர்வாகிக்கு திமுகவில் மாநில பொறுப்பு!

ரஜினிகாந்த் கட்சி தொடங்க வில்லை என்றதும், திட்டவட்டமாக தெரிந்துவிட்டதும் மன்றத்தின் தலைமையும் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து கொள்ளலாமென்றும் சொல்லிவிட்டதால் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலின், திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.