அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

 

அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்று அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று நகம் கடிக்கிறாராம் வைகோ.

அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

2016 சட்டமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி உருவானது. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இக்கூட்டணி மாற்று அரசியலுக்கான முயற்சி என்று பேசப்பட்டது. ஆனாலும், இந்த கூட்டணி அத்தேர்தலில் படு தோல்வியை தழுவியது.

அதன்பிறகு திமுகவுக்குத்தான் தனது முழு ஆதரவு என்று சொல்லிவருகிறார் வைகோ. ஸ்டாலினை தனியாக சந்தித்து 20 சீட் வரைக்கும் வைகோ கேட்டதாகவும், ஸ்டாலினும் ‘பார்க்கலாம்’ என்று சொன்னதால்தான் வைகோ 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது புதுத்தெம்போடு இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது.

அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், ம.ந.கூ. இத்தேர்தலில் அமையுமா? என்ற கேட்டபோது, மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றார்.

ஆனால், போகிற போக்கைப்பார்த்தால் மீண்டும் ம.ந.கூ. அமைப்பதுதான் சரிப்பட்டு வரும் என்றே யோசிக்க வைத்திருக்கிறதாம் ஸ்டாலின் எடுத்திருக்கும் முடிவு.

அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

மதிமுக, விசிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு அதிக சீட் கேட்டு எதிர்ப்பார்த்திருப்பது ஒருபக்கம் இருக்க, இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் என்று தெரிவித்துள்ளன. ஆனால், தனிச்சின்னத்தில் போட்டியிட தடை போட்டிருக்கிறதாம் திமுக ஆலோசனைகுழுவான ஐபேக்.

16 சீட் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் வைகோவுக்கு 5தான் என்ற தகவல் வந்திருக்கிறதாம். இதே போல்தான் கம்யூனிஸ்டுகள், விசிக மற்ற கட்சிகளின் நிலைமையும்.

கேட்ட சீட்டும் கிடைக்கவில்லை. தனிச்சின்னத்திலும் போட்டியிட முடியாத நிலை என்று வந்துவிட்டதால், மீண்டும் மக்கள் நல கூட்டணி உருவாக வாய்ப்பிருப்பதாகவே பேச்சு எழுந்திருக்கிறது.

அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

25க்கு மேல் எதிர்பாத்திருந்த காங்கிரசுக்கு வெறும் 11தான் என்று திமுக முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட காங்கிரசும் அதிருப்தியில் இருக்கிறது. கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் எதிர்பாப்பு நிறைவேறும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதிலும் இதேதான் கதி என்றால் மக்கள் நல கூட்டணி மீண்டும் உதயமாவது உறுதி என்கிறார்கள். மேலும், கூடுதல் பலமாக காங்கிரஸும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறது என்றே சொல்கிறார்கள்.

அவசரப்பட்டு வார்த்தையை விட்ட வைகோ.. மீண்டும் உதயமாகும் மக்கள் நல கூட்டணி?

ம.ந.கூ. மீண்டும் உதயமாவது திமுகவின் இறுதி நிலைப்பாட்டை பொறுத்துதான் என்பதால், திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு இருந்துகொண்டே இருக்கிறது.