திமுக கூட்டணியில் உச்சக்கட்ட மோதல்கள் ?

 

திமுக கூட்டணியில் உச்சக்கட்ட மோதல்கள் ?

திமுக கூட்டணியில் உச்சக்கட்ட மோதல்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. எந்த நேரத்திலும் அந்த கூட்டணி துண்டு துண்டாக உடையலாம் என்கிற நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ’ஐபேக்’ நிறுவனத்தின் ஆலோசனையால் இன்னும் என்னென்ன நிகழப்போகிறதோ! என பதைபதைக்கிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள். இது தொடர்பாக சிலர் கூறுகையில்,

கடந்த எம்.பி தேர்தலில் அபரிமிதமான வெற்றியை ருசித்த திமுக, அதே வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளது. எம்.பி தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை தொடரவும் முடிவு செய்திருந்தது. ஆனால் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் அள்ளிவிடும் கதைகளை நம்பி, இப்போது திமுக தலைமை கடும் விறைப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. ’தனித்துப் போட்டியிட்டாலே தமிழகத்திலும், புதுவையிலும் ஆட்சியைப் பிடிக்கலாம்’ என்கிற ஐபேக்கின் ஆலோசனையை நம்பி, அதற்கான முதல் அடியை புதுவையில் திமுக எடுத்து வைத்திருக்கிறது.

திமுக கூட்டணியில் உச்சக்கட்ட மோதல்கள் ?

புதுவையில் தற்போது வரையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துவிட்டது. வன்னியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக அதே சமூகத்தை சேர்ந்த ’பசையுள்ள பார்ட்டி’ ஜெகத்ரட்சகன் எம்.பியை களமிறக்க தீர்மானித்துள்ளது. பெரும் தொகையை அள்ளியிறைத்து புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என கணக்குப் போட்டு காய்நகர்த்தி வருகிறது.

ஏற்கனவே 15 சீட்டுகள் மட்டுமே தரப்படும் என்கிற திமுகவின் நிபந்தனை தமிழக காங்கிரஸ் பிரமுகர்களை சூடேற்றியுள்ளது. இந்தநிலையில் புதுவையில் கூட்டணியை உaடைப்பது, தமிழகத்திலும் காங்கிரசை கழற்றி விடுவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்துள்ள காங்கிரஸ் தரப்பு, கமலின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் ரகசியமாக நடத்திவந்த பேச்சுவார்த்தைகளை இனி வெளிப்படையாக நடத்த முடிவு செய்துள்ளது. ’குறைந்த இடங்களே தரப்படும்’ என்கிற திமுகவின் கெடுபிடியால் அதிருப்தியில் இருக்கும் பிற கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மமக போன்றவையும் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

திமுக கூட்டணியில் உச்சக்கட்ட மோதல்கள் ?


நடப்பவற்றையெல்லாம் கவனமுடன் பார்த்துவரும் அரசியல் பார்வையாளர்கள், ‘’ ஐபேக்கின் தவறான ஆலோசனையால் திமுக தன் தலையிலேயே மண்ணை வாரி போட ஆரம்பித்திருக்கிறது. அந்த கட்சியின் மமதைக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் கிடைக்கப் போகிறது. தேர்தல் முடிவுகளில் இது நிச்சயம் தெரியவரும். ஜெகத்ரட்சகன் வார்த்தைப்படி தற்கொலை முடிவைத்தான் திமுக எடுத்திருக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது’’ என்கிறார்கள்