ஜெயலலிதா அண்ணன் போதைப்பொருள் பயன்படுத்துபவரா? கவுதம்மேனன் ஏற்படுத்திய சர்ச்சை

 

ஜெயலலிதா அண்ணன் போதைப்பொருள் பயன்படுத்துபவரா? கவுதம்மேனன் ஏற்படுத்திய சர்ச்சை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து சினிமாவும், வெப் தொடர்களும் வந்து கொண்டிருக்கின்றன.

‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் விஜய், கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து படத்தை எடுத்து முடித்துவிட்டார். ‘குயின்’ என்ற பெயரில் இயக்குநர் கவுதம் மேனன் நடிகை ரம்யாகிருஷ்ணனை வைத்து வெப் தொடரினை வெளியிட்டு வருகிறார்.

ஜெயலலிதா அண்ணன் போதைப்பொருள் பயன்படுத்துபவரா? கவுதம்மேனன் ஏற்படுத்திய சர்ச்சை

ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடரினால் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்தார் மீதும் களங்கம் ஏற்படுத்தும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தனது தந்தை போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது போல குயினில் சித்தரிக்கப்படிருக்கிறது என்று கூறி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக, வெப் தொடராக எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா அண்ணன் போதைப்பொருள் பயன்படுத்துபவரா? கவுதம்மேனன் ஏற்படுத்திய சர்ச்சை

இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு, வழக்கின் மறு விசாரணையை வரும்22ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டனர்.