இளையராஜாவுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்திய தினா!

 

இளையராஜாவுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்திய தினா!

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மன உளைச்சலில் இருக்கிறார் என்று நேற்று இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தினா, செய்தியாளர்களிடம் பேசி இளையராஜாவுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார்.

இளையராஜாவுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்திய தினா!

பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசையமைத்து வந்த ஸ்டூடியோவை இடித்துவிட்டு புது ஸ்டூடியோவை கட்ட இருக்கிறது ஸ்டூடியோ நிர்வாகம். அக்கட்டிடம் இடிக்கப்பட்டபோது, பத்ம விபூஷன் விருது உள்பட அங்கே இருந்த பொருட்களை குடோனில் தூக்கிப்போட்டு வைத்திருக்கிறார்கள். அதனால், இளையராஜா பத்ம விபூஷன் விருதை திரும்ப கொடுத்துவிடலாம் என்று சொன்னதை, இளையராஜா பத்ம விபூஷன் விருதினை திரும்ப கொடுக்கிறார் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இளையராஜா, ‘’பேரன்புக்கு உரியவர்களே… நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை, ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லிக்கொள்கிறேன்.

அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.வணக்கம்.’’ என்று வீடியோ பதிவின் மூலம் தனது விளக்கத்தினை வெளியிட்டார்.

தினாவும் அவசர அவசரமாக, ’’பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு தவறுதலான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் அந்த உயரிய விருதுகளை தூக்கி கிடங்கில் போட்டுவிட்டார்கள் என்று கூறினேன். அடுத்து, இசைஞானி இளையராஜா விருதுகளை மத்திய மாநில அரசுகளுக்கு திருப்பி கொடுத்துவிடலாம் என்றுதான் சொன்னேன். கொடுக்கவுள்ளார் என்று கூறியதுபோல் தவறுதலாக ஊடங்ககளில் வந்துகொண்டிருக்கிறது. விருதுகளை திருப்பி கொடுக்க போகிறார் என்று நான் சொல்லவே இல்லை. இந்த பதிவு தவறாக பகிரப்பட்டு இருந்தால் தயவுசெய்து மாற்றி அமைத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’என்று வீடியோ விளக்கத்தை வெளியிட்டார்.

வீடியோ விளக்கங்கள் வெளியிட்டுவிட்டாலும், பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் மன உளைச்சலில் இருக்கும் இளையராஜாவிற்கு நல்லது செய்கிறேன் என்று, மேலும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார் தினா என்கிறார்கள் இளையராஜாவுக்கு நெருக்கமானவர்கள்.